கனடா ஆசையால் உயிரை விட்ட யாழ்ப்பாண இளைஞன்
ஆரியக்குளம் சந்திக்கு அருகாமையில் உள்ள வளவு ஒன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை (22) அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கனடாவுக்கு போக ஆசைப்பட்டு பொருளாதார பிரச்சனை காரணமாக போகமுடியாத நிலையில், விரக்தியடைந்த இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
வைத்தியசாலை வீதி, யாழ்ப்பாணத்தை சேர்ந்த 30 வயது இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
ஆரியக்குளம் சந்திக்கு அருகாமையில் உள்ள வளவு ஒன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை (22) அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்துக்கு சென்ற யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணை மேற்கொண்டுள்ளார்.