டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் கைது
டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 22 ஆம் திகதி இரவு வெல்லம்பிட்டியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் டேன் பிரியசாத் கொல்லப்பட்டார்.
வெல்லம்பிட்டிய லக்சந்த செவன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் மேல் தளத்தில் இரவு 9:10 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்தது.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு துப்பாக்கிதாரிகள் பிஸ்டல் ரக துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிசென்றனர்.
டேன் பிரியசாத் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக சுமார் 10 பேரிடம் இதுவரை வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், மூன்று பேர் நேற்றுவரை கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் இந்த கொலைக்கு காரணமாக உள்ள முக்கிய சந்தேகநபரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.