Skip to content

ஊழியர்களின் விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு

ஊழியர்களின் விடுமுறை

பொதுத் தேர்தலை முன்னிட்டு அனைத்து தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறையும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று (23) முதல் நவம்பர் 14ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படாது என பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தல் தொடர்பான செயற்பாடுகளைக் கருத்திற்கொண்டு விடுமுறையை இரத்து செய்யத் தீர்மானிக்கப்பட்டதாக தபால் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

எனினும், ஏதேனும் சுகவீனம் அல்லது அவசியமான பணிகளுக்காக விடுமுறை எடுப்பது அவசியமானால், மாகாண பிரதி தபால் மா அதிபரின் ஒப்புதலுக்கு அமைய விடுமுறை பெற்றுக்கொள்ள முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் இன்று பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்காளர் அட்டைகள் வழங்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருந்தது.

மேலும், உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


© 2024 Seithi.lk | செய்தி. All Rights Reserved.

Web Design and Development by GCloud