Skip to content

ஐந்து மாணவர்களை துஷ்பிரயோகம் செய்த பிக்கு கைது

துஷ்பிரயோகம்

இரத்தினபுரியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றைச் சேர்ந்த ஐந்து மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் அப்பகுதியிலுள்ள விகாரை ஒன்றின் பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டதாக கலவான பொலிஸார் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுவர்கள் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு தெரியப்படுத்தியதையடுத்து, கலவானை பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பிக்குவை கைது செய்துள்ளனர்.

இதே பாடசாலைக்கு அருகாமையில் குறித்த விகாரை அமைந்துள்ளதுடன், குறித்த பாடசாலையில் 9ஆம் தரத்தில் கல்வி கற்கும் ஐந்து சிறுவர்கள் இவ்வாறு துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மருத்துவ பரிசோதனைக்காக கலவானை ஆதார வைத்தியசாலையில் சிறுவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் கலவான பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


© 2024 Seithi.lk | செய்தி. All Rights Reserved.

Web Design and Development by GCloud