யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட இளம் பாராளுமன்ற வேட்பாளர் திடீரென உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது .
ஜனநாயக தேசிய கூட்டணியில் போட்டியிடும் இளம் வேட்பாளரும், முன்னாள் வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினருமான செந்திவேல் தமிழினியன் வயது 33 என்பவரே உயிரிழந்துள்ளார் .
சுகயீனம் காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நேற்றைய தினம் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் பேதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை (23) உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.